A.G.S.S. பிரேமரத்ன அவர்கள் ஹோரோவ்பொத்தானை பிரதேச செயலகத்தின் புதிய மேலதிக மாவட்ட பதிவாளராக 2026.08.17 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். பல வருடங்களாக காலியாக இருந்த இப்பதவிக்குக் கடமையேற்க வருகை தந்த அவரை, பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அமோகமாக வரவேற்றதோடு, அவரது எதிர்காலப் பணிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்A.G.S.S. பிரேமரத்ன அவர்கள் ஹோரோவ்பொத்தானை பிரதேச செயலகத்தின் புதிய மேலதிக மாவட்ட பதிவாளராக 2026.08.17 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். பல வருடங்களாக காலியாக இருந்த இப்பதவிக்குக் கடமையேற்க வருகை தந்த அவரை, பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அமோகமாக வரவேற்றதோடு, அவரது எதிர்காலப் பணிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவின் இலக்கம் 129 - கிவ்லேகடை, இலக்கம் 124 - கம்மெஹேகேவெவ, இலக்கம் 137 - தவலன்ஹல்மில்லேவ மற்றும் இலக்கம் 148 - வெலங்கஹஉல்பத ஆகிய கிராம உத்திகத்தர் பிரிவுகளில் எவ்வித உரிமையுமின்றி அனுபவித்து வந்த அரச காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் விழா, வடமத்திய மாகாண கௌரவ ஆளுநர் வசந்த குமார விமலசிறி அவர்களின் தலைமையில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன மற்றும் ஏனைய அதிதிகளின் பங்கேற்புடன், பிரதேச செயலாளர் டப்ளியூ.ஜி. உதேஷிகா கே. ராஜபக்ஷ அவர்களின் ஏற்பாட்டில் 2026.04.08 அன்று ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் உதவி பிரதேச செயலாளர் இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து, ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்தின் புதிய உதவி பிரதேச செயலாளராக சந்தரேணு சமரநாயக்க அவர்கள் 2026.01.07 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அவருடைய அன்பு பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில் தைப் பொங்கல் தினத்தைக் கொண்டாடும் வகையில், கடந்த 27ஆம் திகதி பொங்கல் சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து தைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பிரதேச செயலாளரின் தலைமையில், கலாசார உத்தியோகத்தரின் ஏற்பாட்டிலும் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடனும் இவ்விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக பணியாற்றிய திரு. ஜயசிங்க இருகல்பண்டார அவர்கள், 2026.01.06 அன்று இடமாற்றம் பெற்றுச் சென்றதன் காரணமாக ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திலான தனது பணிகளை நிறைவு செய்தார்.கடந்த 04 வருடங்களுக்கு அண்மித்த காலம் உதவி பிரதேச செயலாளராக பல்வேறு சந்தர்ப்பங்களின் கீழ் ஹொரொவ்பொத்தான பிரிவிற்காகத் தனது சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றினார். உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நிலவிய சந்தர்ப்பங்களில், நிர்வாக சேவைக்கு அவர் புதியவர் போதிலும், தளராத தலைமைத்துவத்தை ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு வழங்கியமை அவரது சேவைக்காலத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்ததோடு பலரது பாராட்டுகளையும் பெற்றது.பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில், அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து அவரது சேவையைப் பாராட்டுவதற்காக கௌரவிப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினர்.




















